• Download mobile app
09 Jun 2023, FridayEdition - 2676
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம்

May 25, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4,10,11,21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கா சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் சொத்து வரி மாற்றம் செய்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துவக்கி வைத்து கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சொத்து வரி திருத்த புத்தகங்களை வழங்கினர். தொடர்ந்து இம்முகாம் அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, பூங்கொடி, சிரவை சிவா, உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி வருவாய் அலுவலர் மதிவண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதுபோன்ற சிறப்பு சொத்துவரி முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க