• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மக்கள் சிந்திக்க கூடியவர்கள் யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள் – நடிகை ஸ்ரீபிரியா பிரச்சாரம்

April 1, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியின் தரம் உயர்ந்து, இந்தியாவின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவார் கமலஹாசன் நடிகை ஸ்ரீபிரியா பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசனுக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த நடிகை ஸ்ரீபிரியா பிரச்சாரம் மேற்கொண்டார்.கோவை அம்மன்குளம் பகுதியில் கட்சியினருடன் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் , டார்ச்லைட் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

கமலஹாசன் சினிமாவில் நடிக்கும்போது கூட உயிரை கொடுத்து நடிப்பார் என தெரிவித்த அவர், ஒரு மனிதனுடைய சிறப்பு ,அவருடைய வேலையில் அவர் காட்டும் நாணயத்தில் இருக்கிறது எனவும், அப்படிப்பட்டவர் வெற்றி பெற்றால் கோவை தெற்கு தொகுதியின் தரம் உயர்ந்து, இந்தியாவின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவார் என தெரிவித்தார்.

நேர்மையானவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும்,கோவை மக்கள் சிந்திக்க கூடியவர்கள் யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள் என தெரிவித்தார்.நேர்மை என்ற வார்த்தையை மக்கள் நீதி மட்டும் தான் தைரியமாக சொல்லும் எனவும் பிரச்சாரத்தின் போது ஸ்ரீ பிரியா தெரிவித்தார்.

மேலும் படிக்க