• Download mobile app
14 Jul 2025, MondayEdition - 3442
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரண்டு மாதத்திற்கு பின் நடந்த முதல் திருமணம் !

May 25, 2020 தண்டோரா குழு

கோவை தேவாலயத்தில் ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் முககவசம்,அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடித்து கிறிஸ்துவ திருமணம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றன.இதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவலாயத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திருமணம் நடைபெற்றது. ஆலன் மில்ட்டன், மார்க்கிரேட் ஜெசிந்தா ஆகியோருக்கு அத்தேவலாயத்தின் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் திருமணம் செய்து வைத்தார்.மணமக்கள் மற்றும் திருமணத்தில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்தபடி திருமணத்தில் பங்கேற்றனர்.

IMG-20200525-WA0096

பிரார்த்தனை பாடல் இசைக்கப்பட்ட போது, திருமணத்தில் பங்கேற்றவர்கள் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே, திருமணத்தில் பங்கேற்றவர்கள் தேவலாயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.இதில் பங்கேற்றவர்கள் மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

மேலும் படிக்க