• Download mobile app
20 Jan 2026, TuesdayEdition - 3632
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொடிசியா வளாகத்தில் 400 படுக்கை வசதிகளுடன் பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம்

July 1, 2020 தண்டோரா குழு

கோவை கொடிசியா வளாகத்தில் முதற்கட்டமாக 400 படுக்கை வசதிகளுடன் பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.இதில் 222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 337 பேர் சிகிச்சையில்
உள்ளனர்.

இந்நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் முதற்கட்டமாக 400 படுக்கை வசதிகளுடன் பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் தயாராகி வருவதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

கோவை கொடிசியா வளாகத்தில் முதற்கட்டமாக 400 படுக்கை வசதிகளுடன் #COVID19 பிரத்தியேக சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.
இங்கு கொரோனா அறிகுறியுடன் பெரியளவில் பாதிப்பு இல்லாமல் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவர்.இங்கு கொரோனா அறிகுறியுடன் பெரியளவில் பாதிப்பு இல்லாமல் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவர்.
அறிகுறியுடன் பாதிப்புள்ளவர்களுக்கு மட்டும் இனி வரும் நாட்களில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா சிகிச்சைக்கென மொத்தம் 17 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைப்பதற்கான அனைத்து பணிகளும் கோவையில் நடைபெற்று வருகின்றன.கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சுகாதார மையங்கள், மாநகராட்சி கட்டிடங்கள், தனியார் மையங்கள், கல்வி நிறுவனங்கள் என படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க