• Download mobile app
11 Jul 2025, FridayEdition - 3439
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இருகூர் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் 6 அடி நீளச் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு

September 20, 2019 தண்டோரா குழு

கோவை இருகூர் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் 6 அடி நீளச் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் இருகூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென அங்கன்வாடி மையத்திற்கு 6 அடி கருப்பு சாரை பாம்பு புகுந்துள்ளது. அப்போது அங்கன்வாடி மையத்தில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்பவர் அங்கன்வாடி மையத்தின் சத்துணவு கூடத்தில் இருந்த பாம்பை பிடிக்க முயன்றார், அப்போது பாம்பு கடித்ததால் உடனடியாக மோகன்குமார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின் அங்கிருந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது.பிடிபட்ட பாம்புடன் சிகிச்சைக்காக மோகன்குமார் அழைத்துவரப்பட்டதால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க