• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டம்

March 19, 2023 தண்டோரா குழு

கோடை காலம் துவங்கியதை அடுத்து பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக,ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

கோடை காலத்தை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் முதல் அனைத்து மக்களுக்கும் இலவசமாக நீர் மோர் வழங்கும் நடமாடும் தண்ணீர் பந்தல் எனும் அசத்தல் திட்டத்தை துவக்கியுள்ளனர்.விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற, இதற்கான துவக்க விழா காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட மாணவரணி தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

ஆட்டோவில் தாகம் தீர்ப்போம் எனும் சேவையாக துவங்கியுள்ள இதற்கான துவக்க விழா மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஜே.ஆர்.டி. குழுமங்களின் தலைவர் ஜே.ஆர்.டி. ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் நீர் மோர் கேனை வைத்து கொண்டு ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் முதல் அனைத்து மக்களுக்கும் நீர் மோரை இலவசமாக வழங்கி வரும் இத்திட்டத்தை கோவை வாழ் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இதற்கான துவக்க நிகழ்ச்சியில், சுதந்திர மீட்டர் ஆட்டோ நிர்வாகிகள் ராஜபழனி பாலாஜி பஞ்சலிங்கம் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் பொருளாளர் ராஜா துணை தலைவர் மாரிராஜ் இணை செயலாளர் சதீஷ் குமார் இணை செயலாளர் அருண்குமார் அமைப்பாளர் செந்தில்குமார் துணை அமைப்பாளர் சரவணன் ஆலோசகர் ரோஹித் மாவட்ட நிர்வாகி வினோத் குமார் சிங்கை நகர தலைவர் சுரேஷ் செயலாளர் சதீஷ் உறுப்பினர் கருப்புசாமி கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க