- உச்சநீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் : டிச.5ஆம் தேதி விசாரணை
- “விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு” – நாசா
கோவை துடியலூரை அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் 6 காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளில் சர்வசாதாரணமாக உலாவருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் நேற்று நள்ளிரவில் சுமார் 6 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் வந்ததுள்ளது. யானைகளை பார்த்து அங்கிருந்த தெரு நாய்கள் குறைத்ததால் அதில் கோபம் கொண்ட ஒரு ஆண் யானை நாய்களை துரத்திய காட்சியும் அதனைத் தொடர்ந்து அதனுடன் வந்திருந்த இரண்டு குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் பின்னால் சென்றதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நாய்கள் குறைத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது 6 யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதிகளில் சர்வசாதாரணமாக சென்றதைக் கண்டு மிகுந்த அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது,
காட்டு யானைகள் மலைப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு உணவு தேடி வருகிறது. எனவே வனப்பகுதியில் அதற்கான உணவுகளை ஏற்பாடு செய்து விட்டால் அவைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராது என்றும் உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் வன எல்லைகளில் அகழிகள் அமைத்து தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
வெங்காயம் திருடியவருக்கு தர்ம அடி !
“திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது” – சென்னை உயர் நீதிமன்றம்
கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி
ரயில் மோதி இந்தாண்டில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர் – ரயில்வே எஸ்.பி. மகேஸ்வரன்
இழப்பீடு வழங்காததால் 5 அரசு பேருந்துகள் ஜப்தி செய்ய கோவை நீதிமன்றம் உத்தரவு
கோவையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுக்க முயன்ற கணவர் கைது