• Download mobile app
04 Dec 2025, ThursdayEdition - 3585
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செல்லெக்ஸ் நிறுவனத்தின் செல்டேன் புதிய லித்தியம் வகை பேட்டரி அறிமுகம்

March 29, 2024 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த நிறுவனமான செல்லக்ஸ் (CELLEX) பேட்டரி தயாரிப்பு நிறுவனம் கடந்த சில வருடங்களாக பேட்டரி தயாரிப்புகளில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி ஆற்றல் சேமிப்பு துறையில் அதிக கவனம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் செல்லக்ஸ் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தனது புதிய தயாரிப்பான செல்டேன் (CELTAN) எனும் புதிய பேட்டரியை அறிமுகம் செய்து உள்ளனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஐ.டி.சி.ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதற்கான அறிமுக விழாவில் புதிய செல்டேன் பேட்டரியை இந்தியன் கடற்படை அதிகாரியான தமிழகத்தை சேர்ந்த பாலசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய செல்டேன் பேட்டரியின் திறன்கள் குறித்து செல்லக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான பிரமோத் மாதவன், இணை நிறுவனர் ஜோஸ் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.

புதிதாக தற்போது வணிகச் சந்தையில் நுழையும் செல்டேன் லித்தியம் பேட்டரிகள் அதன் மேம்பட்ட ஆற்றல் சேமிப்பு தீர்வை அறிமுகப்படுத்த உள்ளது. முழுக்க இந்திய தயாரிப்பான இந்த பேட்டரிகள் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் நல்ல செயல் திறனோடு இயங்கும் எனவும் அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தெரிவித்தனர்.
குறிப்பாக பேட்டரி தயாரிப்பில் இந்திய மற்றும் உலக சந்தையில் கோவை நகரம் குறிப்பிட்ட வளர்ச்சியை பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் படிக்க