• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குப்பைகளை அகற்ற 1,300 துப்புரவு பணியாளர்கள்

December 14, 2016 தண்டோரா குழு

சென்னையில் வர்தா புயல் காரணமாக தேங்கிய குப்பைகளை அகற்ற 1,300 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நோய் பரவாமல் தடுக்க மருத்துவகுழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

இது குறித்து சுகாதாரம் அமைச்சகம் அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது;

வார்தா புயல் காரணமாக சென்னை நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு வெளி மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் 1,300 துப்புரவு பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், 500 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 119 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர தேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நிவாரண முகாம்களில் மருத்துவ உதவி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. உணவு பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு மற்றும் பூச்சிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் பாதுகாக்கப்படாத அசுத்த நீரினால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கென மருத்துவ சிகிக்சை வழங்க தலா 50 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் படிக்க