• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி கோவையில் டிரோன் பறக்க தடை: ஆட்சியர் எச்சரிக்கை

August 2, 2021 தண்டோரா குழு

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நாளை (ஆக.3) முதல் 6-ம் தேதி வரை சூலூர் விமான நிலைப் பகுதியில் பறக்கும் கலம் (டிரோன்) பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையம் வருகிறார். அதனையொட்டி, பாதுகாப்பு கருதி, சூலூர் விமான நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பறக்கும் கலம் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

இதனை மீறி யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க