• Download mobile app
30 Jul 2025, WednesdayEdition - 3458
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எச்.ராஜாவை மீது இளைஞர் காங்கிரஸினர் கோவை மாநகர ஆணையரிடம் புகார்

March 31, 2017 தண்டோரா குழு

சோனியா காந்தியை இழிவுபடுத்தி பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸினர் கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாககோவை மாநகர ஆணையர் அமல்ராஜிடம் அவர்கள் அளித்த புகாரில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று மாலை தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை பற்றி மிகவும் இழிவான முறையில் நிறவெறியை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

இதுமட்டுமின்றி சமீப காலமாக அவர் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்ந்து கருத்துக்களை பேசி வருகிறார்.

இவரது கருத்துக்கள் இந்திய ஜனநாயகத்தின் இறையாண்மையை கெடுக்கும் வண்ணம் உள்ளது. இதுமட்டுமின்றி இவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரக அமைவதால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் படிக்க