• Download mobile app
05 Jun 2025, ThursdayEdition - 3403
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

March 16, 2021 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் சார்பாக அனுப்பப்படும் விற்பனையாளர்களை, உழவர் சந்தை நிர்வாகம் அனுமதிக்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம் ஆகிய இடங்களில் உழவர் சந்தை உள்ளது. இதில் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை கோவை மாநகரின் மத்தியில் அமைந்துள்ளதால் விற்பனை அளவும், பொது மக்கள் வருகையும் அதிகளவில் உள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, சர்க்கார் சாமக்குளம்,
பெரியநாயக்கன்பாளையம் ஆகிய
ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட விவசாயிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். தினசரி காலை விவசாயிகள் தங்கள் பகுதியில் இருந்து காய்கறிகளை கொண்டு வருகின்றனர். இங்கு திறந்த வெளிமேடையில் 14 கடைகளும், பசுமை குடிலில் 14 கடைகளும், 4 ஷெட்களில் 124 கடைகளும், திறந்தவெளி தரையில் 40 கடைகளும் என மொத்தம் 192 கடை உள்ளது.

இது தவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 கடை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே விவசாயிகள் சார்பாக அனுப்பப்படும் விற்பனையாளர்களை உழவர் சந்தை நிர்வாகம் அனுமதிக்க மறுக்கிறது. இதனை கண்டித்து விவசாயிகள் இன்று ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் சு.பழனிசாமி கூறுகையில்,

” தோட்ட வேலைகளில் கவனம் செலுத்தும் விவசாயிகள் தங்கள் சார்பாக ஒரு விற்பனையாளரை உழவர் சந்தைக்கு அனுப்புவது வழக்கமான ஒன்று தான். விவசாயிக்கு பல்வேறு வேலைகள் இருக்கும் கால்நடைகள் பராமரிப்பு, தண்ணீர் பாச்சுவது என. விவசாயிகளே நேரடியாக வந்தால் அந்த வேலை பாதிக்கும். அவர்களுக்கு இழப்பு ஏற்படும். ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் சார்பாக அனுப்பப்படும் விற்பனையாளர்களை அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் தொடரும்,” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க