• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி சார்பில் மடப்பள்ளி (சமையல் அறை) திறப்பு

December 17, 2022 தண்டோரா குழு

அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி சார்பாக இன்று காலை கோவைப்புதூரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் மடப்பள்ளி (சமையல் அறை) திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி சார்பாக 5வது நிரந்தர சேவை திட்டமாக
பெருமாள் கோவிலில் மடப்பள்ளி (சமையல் அறை) திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இதன் மதிப்பீடு சுமார் ரூபாய் 8 லட்சம் ஆகும். இதனை அலையன்ஸ் கிளப் கோவை மாவட்ட ஆளுநர் அலையன்ஸ் சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் அலையன்ஸ் கிளப் முதல் துணை ஆளுநர் அலையன்ஸ் டாக்டர் ஶ்ரீநிவாசகிரி மற்றும் அலையன்ஸ் பிரியா கிரி அவர்கள் இதற்கான நன்கொடை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட அமைச்சரவை இரண்டாம் துனை ஆளுநர் அலையன்ஸ் ராஜன் மற்றும் செயலாளர் ரமேஷ்,ஹில் சிட்டி சங்கத் தலைவர்சதீஷ்,செயலாளர் சரவணராஜா, மாவட்ட தலைவர் பிரபாகரன் அலையன்ஸ் நிதிஷ் குட்டன், அலையன்ஸ் ஜெயகிருஷ்ணன், அலையன்ஸ் ஆனந்த சிவகுமார், அலையன்ஸ் துரைச்சந்திரன், அலையன்ஸ் கோபாலகிருஷ்ணன்,மற்றும் சங்கர செல்வராஜ், அலையன்ஸ் வள்ளியம்மாள் மற்றும் திருவேங்கடவன் சேரிட்டபிள் சொசைட்டி தலைவர் நரசிம்மன் செயலாளர் ரங்கராஜன் கலந்து கொண்டனர். ஒப்பிலி ஐயங்கார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து மாபெரும் மருத்துவ முகாம் திருவேங்கடவன் சாரிடபிள் சொசைட்டி& ராமகிருஷ்ணா மருத்துவமனை உடன் இணைந்து நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் சுமார் 2 லட்சம் மதிப்புடைய அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக பொதுமக்களுக்கு செய்யப்பட்டது. இதனை அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் அலை சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க