• Download mobile app
11 Mar 2026, WednesdayEdition - 3682
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர்களை வேறு யாரோ இயக்குகிறார்கள் – கே.பி.முனுசாமி

April 24, 2017 தண்டோரா குழு

பேச்சுவார்த்தைக்கு வந்து விட்டால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைச்சர்களை வேறு யாரோ இயக்குகிறார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது என்று ஒ.பன்னீர்செல்வம் அணி பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“ மறைந்த முதல்வர் ஜெயலலிதா இயற்கையாக மரணம் அடையவில்லை என தொண்டர்கள் கருதுகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டு விட்டாரோ என தொண்டர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்ய முயற்சிக்கும் சசிகலா குடும்பத்தைச் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தோம். ஆனால் எடப்பாடி அணியில் கடந்த 2 நாட்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு வந்து விட்டால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைச்சர்களை வேறு யாரோ இயக்குகிறார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.

எடப்பாடி அணியினர் பேசுவதற்கு தயார் எனக் கூறி அவர்களாகவே குழு அமைத்துக் கொண்டனர். ஆனால் தற்போது பேச்சுவார்த்தை குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்கின்றனர். அமைச்சர்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக குழப்பமான கருத்தை வெளிப்படுத்துகின்றனர்.”

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

மேலும் படிக்க