• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்னூர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை -2 பேர் கைது

March 30, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான அன்னூர் பசூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (Methamphetamine)-ஐ வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜின்சன் (29) மற்றும் ஷான்சன் (34) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.24,000/- மதிப்புள்ள 8 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் இரண்டு சக்கர வாகனம்-2 ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க