• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடிசியா டெவலப்பர்ஸ் சார்பில் கோவை அருகே அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டுமனைகள் விற்பனை தொடக்க விழா

September 21, 2024 தண்டோரா குழு

கோவைப்புதூரை அடுத்த சி.பி.எம் கல்லூரி அருகே அடிசியா டெவலப்பர்ஸ் சார்பில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விற்பனை தொடக்க விழா இன்று
நடைபெற்றது.கோவை எம்.கே குழுமம்நிறுவனர் மணிகண்டன் விழாவை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கோவை எம் கே குரூப் நிறுவனர் மணிகண்டன் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆண்டனி பபியூஸ்ஆகியோர் கூறியதாவது:-

அடிசியா டெவலப்பர்ஸ் சார்பில் இங்கு மொத்தம் 50 க்கும் மேற்பட்டவீட்டு மனைகள் விற்பனைக்காக உள்ளன.மேலும் இந்த சைட்டில் 400 சதுர முதல் 4000 சதுரடி வரை வீட்டுமனைகள் உள்ளன. மாநகராட்சி தண்ணீர் வசதி, மின் வசதி, தார் சாலைகள்,தெருவிளக்கு வசதிகள், குழந்தைகளளுக்கான பார்க், முதியவர்களுக்கான பூங்கா, நடை பயிற்சி செய்யும் இடங்கள், சாலையோர மரங்கள் என பல்வேறு அம்சங்கள் இங்கு அமைந்துள்ளன.

அடுத்த 2 ஆண்டுகள் இந்த பகுதியை அடிசியா டெவலப்பர்ஸ் பராமரித்து தருகின்றது.கோவைப்புதூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு சென்ட் நிலம் ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், துவக்க விழாவின் ஒரு பகுதியாக அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சென்ட் ரூ.12.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்.

மேலும் படிக்க