• Download mobile app
24 Jun 2025, TuesdayEdition - 3422
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வரப்பட்ட 3.08 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

    16 Thursday 2021 தண்டோரா குழு

    சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் உட்பட 3.08 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் செய்துள்ளனர்.

    கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 14ம் தேதி வழக்கம் போல் சோதனை நடத்தினர். அப்போது சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 6 பேர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அதில் உடமைகளை மறைத்து கொண்டு வரப்பட்ட 1.92 மதிப்பிலான 3985 கிராம் தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் என 1.16 மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பரிந்துரை செய்யப்பட்ட மொத்த தங்கம் மற்றும் பொருட்களின் சந்தைமதிப்பு 3.08 கோடி இருக்கலாம் எனக் கூறியுள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.