• Download mobile app
24 Jul 2025, ThursdayEdition - 3452
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் சேலத்தில் விபத்து

    13 Monday 2021 தண்டோரா குழு

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவராகவும் இருப்பவர் வானதி சீனிவாசன். இவரது மகன் ஆதர்ஷ்(22) சென்னையில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது உறவினர் திருமணத்திற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதர்ஷ் கோவை சென்றுள்ளார்.திருமண நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தாா்.அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்துபோது, மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதியது.

    தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கொண்டலாம் பட்டி காவல் துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய ஆதர்ஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால், அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கிய ஆதர்ஷ் எந்தவித காயமும் உயிர் தப்பினார்.

    அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் மாற்று காரில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து அன்னதானபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.