• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய மதுபிரியர்கள்

    11 Saturday 2021 தண்டோரா குழு

    கோவை பட்டணம் சாலையில் உள்ள நெசவாளர் காலனியில் பகுதியில் அரசு மதுபான கடையின் இயங்கி வருகின்றது. இதன் அருகில் உள்ள மதுக்கூடத்தில் கூட்டமாக ஏராளமானோர் மது குடிப்பதாக வந்த தகவலையடுத்து மாநகராட்சி ஊழியர் ஒருவர் அங்கு சோதனைக்கு சென்றார். அங்கு

    குடிபோதையில் இருந்த நபர்கள் மாநகராட்சி ஊழியர் மீது மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தவே அவர் சக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மற்ற மாநகராட்சி ஊழியர்கள், பாட்டிலை கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் மீது வீசிய , குடிபோதையில் இருந்த நபர்களை பிடித்து சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மாநகராட்சி ஊழியர்களை தாக்கியவர்கள் நெசவாளர் காலணியை சேர்ந்த சுரேஷ் , அசோக்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.