• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவை விமான நிலையத்தில் ஒரே மாதத்தில் 688 டன் சரக்குகள் கையாண்டு சாதனை !

    8 Wednesday 2021 தண்டோரா குழு

    கோவை விமான நிலையத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 688 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக கோவை விமான நிலையத்திற்கு மிகக்குறைந்த அளவு பயணிகளே வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கோவைக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனிடையே கடந்த மாதத்தில் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு 98 ஆயிரத்து 817 பயணிகள் வந்து சென்று உள்ளனர்.

    இது குறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதாவது:

    கொரோனா அச்சம் காரணமாக கோவையில் இருந்து சார்ஜாவிற்கு மட்டுமே சர்வதேச விமானம் இயக்கப்படுகிறது.சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.இதன்படி கடந்த மாதம் மட்டும் சார்ஜாவிற்கு 24 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரத்து 291 பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.
    இது தவிர கோவையில் இருந்து பழங்கள், பூக்கள் என 101 டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் கடந்த மாதம் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு உள்ளூர் விமானங்கள் மொத்தம் 840 இயக்கப்பட்டு உள்ளது. இதில் 96 ஆயிரத்து 526 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.மேலும் 581 டன் சரக்குகளும் கையாளப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாடுகளுக்கு வெறும் 12 விமானங்கள் மட்டுமே கோவையில் இருந்து இயக்கப்பட்டது. இதில் 539 பேர் மட்டுமே பயணம் செய்தனர். உள்நாட்டில் இயக்கப்பட்ட விமானத்தில் 28 ஆயிரம் பேரும் பயணம் செய்தனர். கோவையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கோவைக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.