• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு!

    23 Monday 2021 தண்டோரா குழு

    கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி மையத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர் பிற மாநிலங்கள், நாடுகளுக்கு செல்லவும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் தடுப்பூசி உரிய நேரத்தில் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார்.

    இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறும்போது,

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோளிகள் அவர்களுடன் இருக்கும் உறவினர்கள், மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நபர்களுக்கு 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதனால் தடுப்பூசி முகாம் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும்.மேலும் இஎஸ்ஐ மருத்துவமனை பிற அரசு மருத்துவமனையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.