• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    தேசிய அளவிலான கபடி போட்டி; தங்கம் வென்ற வீரர்களுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி வாழ்த்து

    23 Monday 2021 தண்டோரா குழு

    பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் 4வது தேசிய அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. இந்தஅணியில் இடம் பெற்றிருந்த ரத்தினபுரி பகுதியின் வீர்ர்கள் இருவருக்கு கோவை எம்பி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் ஆகஸ்ட் 6 முதல் 8 வரை 4வது தேசிய அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் இருந்து பயிற்சியாளர் சதீஷ்குமார் தலைமையில் 17வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 19வயதுக்குட்பட்ட இரு அணிகள் என மொத்தம் 22 பேர் சென்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவுடன் விளையாடி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

    இந்த அணியில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த ரம்யா, ராதிகா என்கிற இரண்டு சகோதிரிகளும் இடம்பெற்றிருந்தனர்.இவர்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்த வீரர்கள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் இருவருக்கும் பி.ஆர்.நடராஜன் எம்பி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.