• Download mobile app
26 Jun 2025, ThursdayEdition - 3424
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவை கரும்புகடையில் விளையாட்டுப் பயிற்சி மைதானம் திறப்பு !

    20 Monday 2021 தண்டோரா குழு

    இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் விளையாட்டுப் பிரிவான Track Force Sports Club (TFSC) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி அளித்து அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகளில் பங்கெடுக்கச் செய்துள்ளது. அதன் அடுத்த நிகழ்வாக விளையாட்டுப் பயிற்சி மைதானம் கோவை கரும்புக்கடை, ஆசாத் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

    TFSC சார்பாக ஆசாத் நகர் பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மைதானம் திறப்பு விழா நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதர் மைதானத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வை SIO கோவை மாவட்டத் தலைவர் முகமது ஆசிக் தலைமை தாங்கினார்.

    மேலும் இந்நிகழ்வில் திமுக கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், ரத்தினம் குழுமத்தின் தலைவர் Dr.மதன் எ செந்தில்,சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்ஸ் அலி,இந்தியா மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழ் நாடு தலைவர் (SIO) சபீர் அஹமத்,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர் தலைவர் உமர் பாருக்,ஜமாத் செயலாளர் அப்துல் ஹக்கீம், SA vegetable உரிமையாளர் SA பஷீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மேலும் TFSC தமிழக பொருப்பாளர் சுல்தான் நன்றியுரை கூறினார்.நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசுகளும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.