• Download mobile app
24 Jun 2025, TuesdayEdition - 3422
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது பேக்கரியில் இலவச டீ,காபி வழங்கி வரும் பா.ஜ.க.தொண்டர் !

    17 Friday 2021 தண்டோரா குழு

    பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்று வருடங்களாக தனது பேக்கரியில் இலவச டீ,காபி வழங்கி வரும் பா.ஜ.க.தொண்டர்.

    பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க வினர் மற்றும் பல்வேறு பிரிவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை கணபதி மோர் மார்க்கெட் பகுதியில் செல்வம் பேக்கரி எனும் தேநீரகத்தை நடத்தி வரும் தாமரை சேகர் என்பவர் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முழுவதும் கடைக்கு வருபவர்களுக்கு இலவசமாக டீ மற்றும் காபியை வழங்கி வருகிறார்.வ .ஜ.க.விவசாய அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக உள்ள இவர்,கடந்த மூன்று ஆண்டுகளாக மோடியின் பிறந்த தினத்தில் இந்த சேவையை செய்து வருகிறார்.

    காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை தொடர உள்ள இந்த சேவை துவக்க விழாவில்,மாநில பொதுச் செயலாளர் ஜி கே செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் , மாநில விவசாய அணி செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் நந்தகுமார், மண்டல தலைவர் வெங்கடேஷ் ,மண்டல செயலாளர் சிவக்குமார் , மாவட்ட செயலாளர்கள் பூவை தங்கம் , மோகனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.