• Download mobile app
23 Jun 2025, MondayEdition - 3421
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    குடிநீர் விநியோம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

    15 Wednesday 2021 தண்டோரா குழு

    கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சின்னவேடம்பட்டி, துடியலூர் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

    கோவை துடியலூர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் நீருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு வார்டு எண் 26, 42, 43 ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த குடிநீர் விநியோம் தொடர்பான குறைபாடுகள், மாநகராட்சிக்கு பெறப்படும் குடிநீர் அளவு குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் துடியலூரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அருகாமையில் அமைந்துள்ள மாநகராட்சி கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.