• Download mobile app
22 Jun 2025, SundayEdition - 3420
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவையில் நாளை UDID மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    15 Wednesday 2021 தண்டோரா குழு

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் நாளை 16-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு அடையாள அட்டை விண்ணப்பித்தவர்கள் தக்க சான்றுகளை வழங்கி சிறப்பு அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID ) க்கான ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் (மணியக்காரர் அலுவலகம்/ VAO office) அலுவலகங்களிலும் 16 .9 .2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளில் UDID கார்டுக்கு விண்ணப்பித்து நாளது அதுவரை UDID கிடைக்கபெறாத மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள் மருத்துவ சான்று உட்பட ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் அன்மையில் எடுக்கப்பட்ட மார்பளவு புகைப்படம் ஒன்று மற்றும் தங்களது கையொப்பம் அல்லது கைரேகை ஆகியவற்றுடன் தங்களது தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு மேற்படி ஆவணங்களை தங்கள் வசிக்கும் பகுதிக்கு உரிய கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.