• Download mobile app
21 Jun 2025, SaturdayEdition - 3419
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கருகிய தோசையை மனைவி பரிமாறியதால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

    13 Monday 2021 தண்டோரா குழு

    கருகிய தோசையை மனைவி தனக்கு பரிமாறியதால் கோவையில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி நாராயணசாமி நகரை சேர்ந்தவர் பழனி (52). கட்டிட தொழிலாளி. இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று இரவு இவரது மாதவி, தோசை சுட்டு கணவருக்கு பரிமாறி உள்ளார். அதில் ஒரு தோசை கருகிய நிலையில் உள்ளது.

    இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த பழனி, அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு, தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவர் ஏற்கனவே குடும்ப தகராறில் 4 முறை தற்கொலைக்கு முயன்றவர் என்பதும், 5வது முறை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதும் தெரியவந்தது.