• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறப்பு – குவிந்த சுற்றுலா பயணிகள் !

    6 Monday 2021 தண்டோரா குழு

    கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக சாடிவயல் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டது. காரமடை பகுதியில் உள்ள பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாவும் மூடப்பட்டன.

    தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து இன்று முதல் கோவை குற்றாலம், பூச்சமரத்துர் சூழல் சுற்றுலா மீண்டும் திறக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலா பயணிகள் coimbatorewilderness.com என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்ய வேண்டும்.

    இணையதளம் மூலம் பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டனர்.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குற்றாலம் செயல்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு பின் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் வரத்து உள்ளது.

    மழையினால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.