• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    சூலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

    6 Monday 2021 தண்டோரா குழு

    கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான் பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக
    அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10,11,12 மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ரேண்டம் முறையில் கொரொனா சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

    கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரேண்டம் முறையில் கொரொனா சோதனை நடத்தப்பட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.இதனையடுத்து அவர்கள் 3 பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று(6.9.21) பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சுல்தான் பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் 33 மாணவர்களுக்கு சோதனை செய்ததில் மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் 3 மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவ மாணவர்களுக்வு சுகாதாரத்துறையினர் இன்று கொரொனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

    தொற்று ஏற்பட்ட மாணவர்கள் 3 பேருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.