• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவையில் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு 5 ஆயிரம் கடிதம் அனுப்பும் போராட்டம்

    3 Friday 2021 தண்டோரா குழு

    நாட்டில் சமையல் கியாஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமையல் கியாஸ் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்து தற்போது 900 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    அந்தவகையில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கேஸ் விலை உயர்வை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் மூலமாக 5ஆயிரம் கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடத்தினர்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து தபால் நிலையம் வரை ஐந்தாயிரம் கடிதங்களை ஒரு தட்டில் வைத்து ஏந்தியவாறு ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு தபால்களை அனுப்பினர்.