• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    31 Tuesday 2021 தண்டோரா குழு

    கோவை மாவட்டம் அதிமுக சார்பாக அணைத்து இடங்களிலும் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் மாணவர்கள் நலன்கருதி கொண்டுவரபட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலை கழகத்தை திமுக முடக்கும் நோக்குடன் செயல்படுவதை கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் முன்னால் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சி கொரடா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

    மேலும் திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்தை ரத்துசெய்யும் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர், முன்னால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கைதுசெய்து அடக்குமுறையில் ஈடுபட்ட திமுக அரசை கண்டித்து கோவை குணியமுத்தூர் பகுதியில் பகுதிகழக செயலாளர் மதனகோபால் தலைமையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கோவை பூமார்க்கெட், காந்திபுரம், கோவைபுதூர் உட்பட மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.