• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு திரட்டி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாரத் கிஷான் யூனியன்

    30 Monday 2021 தண்டோரா குழு

    கடந்த 275 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர் 270 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். இருந்தபோதும் மத்திய அரசு எந்தவித செவி சாய்க்கவும் இல்லை என்று விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவாக பாரத் கிஷான் யூனியன் சார்பாக ராஜிந்தர் சிங் கோல்டன் என்பவர் தமிழகம் முழுவதும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக ஆதரவு திரட்டியும் ஆட்களை சேகரித்தும் வருகிறார் அதன் ஒரு பகுதியாக கோவை வந்த இவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது, தற்போது வரை டெல்லியில் போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியாவில் மொத்தம் ஆறு லட்சம் ஊர்கள் உள்ளன. ஊருக்கு ஒருவர் வந்தாலும் ஆறரை லட்சம் பேர் விவசாயிகளுக்காக போராடி வெற்றி பெறலாம் எனவும் தெரிவித்தார்.

    மேலும் தமிழகத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக போராடிய விவசாயிகள் அனைவரும் மீதும் போடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என தற்போதைய தமிழக அரசு அறிவித்ததை மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக கருதுகிறேன் எனவும் பாராட்டக்கூடிய விஷயம் என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து இந்தப் பயணமானது தமிழகம் முழுவதும் சென்று பரப்புரை மேற்கொண்டு ஆட்களை திரட்டி செல்ல என உள்ளதாக தெரிவித்துள்ளார்.