• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    முத்திரை வரி விலக்கு சலுகையை அமல்படுத்த கோரிக்கை

    26 Thursday 2021 தண்டோரா குழு

    கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    கொரோனா தாக்கத்திலிருந்து தொழில் துறையை மீட்கும் வகையில் தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தியது.

    அந்த ஆலோசனைக்கு பிறகு 2021ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதியிட்டு வெளியிடப்பட்ட அரசாணையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெறும் புதிய கடன்களுக்கு செலுத்த வேண்டிய முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில், முத்திரை வரிக்கு மட்டும் நடப்பாண்டு இறுதி வரை விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிப்பானது இதுவரை அமலுக்கு வரவில்லை. இதனால் புதிதாக கடன் பெறும் சிறு, குறு நிறுவனங்கள் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சலுகையின் கீழ் பயன்பெற முடியாத நிலை உள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் வழக்கமான முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை செலுத்த வலியுறுத்தப்படும் நிலை உள்ளது.

    எனவே தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மேற்கூறப்பட்ட அரசாணையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இந்த முத்திரை வரி விலக்கு சலுகையை வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நடப்பு நிதியாண்டு முடியும் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.