• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    இ.பி.எப் கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வலியுறுத்தல்

    21 Saturday 2021 தண்டோரா குழு

    இ.பி.எப்., கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்கவிட்டால் ஆதாரை இணைக்காத சந்தாதாரர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் பணம் செலுத்தவோ, எடுக்கவோ, சலுகை பெறவோ முடியாது என இ.பி.எப். எனப்படும் வருங்கால வைப்பு நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள், தங்களின் யு.ஏ.என்., எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இ.பி.எப்., கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத சந்தாதாரர்களின் கணக்கிற்கு, அவர்களது நிறுவனத்திடம் இருந்து சந்தா தொகை வசூலிக்கப்பட மாட்டாது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது.

    ஆதார் எண்ணை இணைக்கும்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எந இ.பி.எப். வலியுறுத்தி உள்ளது. இணையதளம் வாயிலாகவோ அல்லது இ.பி.எப்., அலுவலகத்திலோ ஆதார் எண்ணை இணைக்கலாம். இத்தகவலை கோவை மண்டல பி.எப் கமிஷனர் ரஞ்சாய் முசாஹரே தெரிவித்துள்ளார்.