• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    டாடா டீ வழங்கும் தமிழ் வாழ்க்கை முறை குறித்த புதிய விளம்பரத்துடன் சக்ரா கோல்ட் கேர் அறிமுகம்!

    18 Wednesday 2021 தண்டோரா குழு

    தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தேயிலை தயாரிப்பு நிறுவனமான டாடா டீ சக்ரா கோல்ட் இன்று புதிதாக டாடா டீ சக்ரா கோல்ட் கேர் என்ற புதிய ரகத்தை தமிழகத்துக்கென பிரத்யேகமாக அறிமுகம் செய்கிறது.

    புதிய ரக டாடா டீ சக்ரா கோல்ட் கேர் நலம் பயக்கும் ஐந்து வகையான இயற்கை மூலப் பொருட்களை கலந்து தயார் செய்யப்படுகிறது. அவை, தமிழ் வீடுகளில் உடல் நலனுக்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருட்களான அதிமதுரம், துளசி,ஏலக்காய், இஞ்சி மற்றும் பிரம்மி ஆகியவற்றை,தங்கள் வாடிக்கையாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு சேர்த்துள்ளது.

    இந்த அறிமுகத்தின் ஒரு பகுதியாக, தமிழர் மனதின் அன்பான பராமரிப்பு முறையை வெளிப்படுத்தும் விதமாக புதிய விளம்பரம் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர் வாழ்க்கை முறையானது தங்களது மற்றும் தங்களுக்கு பிரியமானவர்களின் உடல் நலனை காப்பதில் எவ்வாறு அக்கறை கொண்டுள்ளது என்பது சித்தரிக்கப்படுகிறது. இதை மையக் கருத்தாகக் கொண்டு அமைந்துள்ள புதிய ரக சக்ரா கோல்ட் கேர் விளம்பரம், இயல்பாகவே தமிழர்கள் தங்கள் வாழ்முறையில் அன்பான பராமரிப்பை எவ்விதம் வெளிப்படுத்துகின்றனர் என்ற சிறப்பியல்பையும் காட்டுகிறது.

    இப்படத்தில், தமிழர் வீடு ஒன்றில், சமையலில் ஈடுபடும் மனைவியை கவனிக்கும் கணவன், அன்றைய தினம் அவள் தலையில் மல்லிகைப் பூ சூடாமல் இருப்பதை உணர்ந்து, அவள் உடல் நலமின்றி இருப்பதை புரிந்து கொண்டு, அவளுக்கு சமையலில் உதவ செல்கிறான். இதே போன்று தமிழரின் அன்றாட வாழ்வில் நடைபெறும் பல்வேறு நெஞ்சை நெகிழச் செய்யும் காட்சிகள் காட்டப்பட்டு அன்பானவர்கள் மீதான தமிழ் மனதின் அக்கறையுள்ள பராமரிப்பு முறையை முல்லன் லிண்டாஸ் இதில் பதிவு செய்துள்ளது. இதே போன்ற மற்றொரு காட்சியில் அன்றாட அக்கறையை வெளிக்காட்டும் வகையில் மனைவி கணவனுக்கு சக்ரா கோல்ட் கேர் தேநீர் தயாரித்து அளிப்பதுடன் இப்படம் முடிவடைகிறது.

    இப் புதிய ரகம் அறிமுகம் குறித்து, டாடா கன்ஸ்யூமர் புரொடெக்டஸ் (இந்தியா மற்றும் தெற்காசியா) பேக்கேஜ்டு பெவரேஜஸ் பிரிவின் தலைவர் புனீத் தாஸ் கூறுகையில்,

    இந்த பெருந்தொற்று காலத்தில் வாடிக்கையாளர்கள் நம்பகமான, ஆரோக்கியமான தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் தங்களையும், தங்களது அன்பானவர்களையும் தினசரி அக்கறையுடன் பராமரித்துக் கொள்ள, அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த புதிய சக்ரா கோல்ட் கேர் ரகத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளோம். தமிழர்களுக்கான தேநீர் என ஏற்கனவே நன்கு அறிமுகமான, டாடா டீ சக்ரா கோல்ட்-ன் விளம்பரங்கள் தமிழர்களின் வாழ்க்கை முறையையும், பிராந்திய பெருமையையும் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளன.

    இப்புதிய விளம்பரம் இத்திசையில் மேலும் ஒரு காலடி வைப்பாகும். தனித்தன்மை வாய்ந்த, அக்கறை கொண்ட ஒரு கலாச்சாரத்துக்குள் இன்னும் ஆழமாக செல்வதற்கான ஒரு தனித்துவமான வழிமுறையாகும். அவர்களின் அன்றாட பராமரிப்புக்காக தினமும் ஒரு கப் சக்ரா கோல்ட் கேர் டீ தயாரிப்பதை போல, செயல்பாடுகளின் வழியாக அக்கறையை தமிழர்களின் வாழ்க்கை முறை வெளிப்படுத்துகிறது.

    இந்த விளம்பரம் குறித்து, முல்லன் லிண்டாஸ்-தலைமை படைப்பாக்க அதிகாரி, கரீமா கண்டெல்வெல் கூறுகையில்,

    ஒரு பிராந்தியத்தின் குறிப்பான தனித்தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையிலான பிராண்டுகளை அறிமுகம் செய்யும் டாடா டீ-யின் அணுகுமுறையைத் தொடர்ந்து, ஏற்கெனவே தமிழர்களுக்கான டீ என்று பிரபலமான முதன்மை பிராண்டான சக்ரா கோல்ட் ரகத்தை முன்னெடுக்கும் வகையில், சக்ரா கோல்ட் கேர் என்ற புதிய பிராண்டுக்கான விளம்பரத்தை தொடங்கியுள்ளது. தமிழர்கள் தங்களுடைய அக்கறையை வெற்று சொற்களாக இல்லாமல், செயல் மூலம் வெளிப்படுத்துவர். ஒருலரின் தேவையை கேட்காமலேயே அவரது எண்ணத்தை புரிந்து கொண்டு அக்கறையை வெளிப்படுத்துவர். இந்த வர்த்தக விளம்பரம் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான இது போன்ற மென்மையான தருணங்களையும், தமிழர்களின் அக்கறை மிகுந்த தனித்துவமான வாழ்க்கை முறையையும் கொண்டாடுகிறது.

    இந்த டாடா டீ சக்ரா கோல்ட் கேர் அனைத்து இ-காமர்ஸ் தளங்களிலும், முன்னணி கடைகளிலும் கிடைக்கும்.