• Download mobile app
24 Aug 2025, SundayEdition - 3483
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவையான பக்கோடா குழம்பு

January 26, 2018 tamil.webdunia.com

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – கால் கிலோ
பூண்டு – 3 பல்
இஞ்சி – சிறிய துண்டு
மஞ்சள் துர்ள் – 1 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 5
தனியாத் தூள் 1 ஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
சோம்பு, சீரகம் – 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 4
கடுகு, உளுந்து – அரை ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – பொடித்தது – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
புதினா, கொத்த மல்லி – சிறிதளவு

செய்முறை:

கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், சோம்பு இவற்றைச் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த பருப்பு விழுதைச் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

இஞ்சி பூண்டை நசுக்கி வைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, இஞ்சி, நறுக்கிய தக்காளி இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பச்சை மிளகாய், கசகசா, முந்திரி, தேங்காய் இவற்றை அரைத்துச் சேர்த்து, தனியாப் பொடி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

பிறகு தேவையான உப்பு, சேர்த்து, பொரித்த உருண்டைகளையும் போட்டு கொதித்ததும் புதினா, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பக்கோடா குழம்பு தயார்.

மேலும் படிக்க