• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காளான் பிரியாணி செய்ய…!

September 5, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

காளான் – 1/2 கிலோ
பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/4 கப்
புதினா – 1/4 கப்
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
தயிர் – சிறிதளவு
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

பிரியாணி இலை,ஏலக்காய்,லவங்கம்,கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப.

செய்முறை:

முதலில் காளானை கழுவி சிறியதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.அதே சமயம்,அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும்,பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய்,லவங்கம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய்,கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும்.பின் இஞ்சி,பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கியதும்,காளானை போட்டு பிரட்டி,மஞ்சள் தூள்,மல்லி தூள்,சோம்பு தூள்,தயிர்,தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து,நன்கு கிரேவி போன்று வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.அதே சமயம் குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து அதில் அரிசியைக் கழுவி போட்டு,அந்த கிரேவியை ஊற்றி,3 கப் தண்ணீரை ஊற்றி,குக்கரை மூடி 1 விசில் வைத்து 10 நிமிடங்கள் அப்படியே சிறிய தீயில் வைத்து இறக்கவும்.சுவையான காளான் பிரியாணி தயார்.

மேலும் படிக்க