தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – இரண்டு கப்
தக்காளி விழுது – ஒரு கப்
தேங்காய் பால் – ஒரு கப்
தண்ணீர் – இரண்டு கப்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
முள் நீக்கிய மீன்துண்டுகள் – பத்து
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – எட்டு பல்
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – நான்கு
கொத்தமல்லி இலை – ஒரு கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
ஊற வைக்க:
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கவும். இந்த விழுதில் மீனை புரட்டி ஊற வைக்கவும்.
செய்முறை
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரிசியை மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். தக்காளி விழுது, தேங்காய்பால், தண்ணீர் ஒன்றை கப் சேர்க்கவும். உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும். பாத்திரத்தை மூடி அரிசியை வேக வைக்கவும். குறைந்த தீயில் இதை வைத்திருக்கவும் என்பது சதவிதம் வெந்தால் போதும் (குழையாமல் பார்த்துக் கொள்ளவும்).
மீன் செய்முறை
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். மசாலாவில் ஊற வைத்த மீனை சேர்த்து சிறிது நீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும். வேக வைத்த பாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்