• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செட்டிநாட்டு கந்தரப்பம்

November 1, 2017

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1/2 கப்
உளுந்து – 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் – 3
தேங்காய் துருவியது – 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு
வெல்லம் – 1 கப் பொடித்தது

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை 1 வரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

கடாயில் எண்ணெய் காய வைக்கவும். காய்ந்த பின் 1 கரண்டி அளவு மாவை எடுத்து காய்ந்த எண்ணெயின் நடுவில் மெதுவாக உற்றவும். ஓரங்களில் வெந்த பின், திருப்பி விட்டு 1/2 நிமிடத்தில் எடுக்கவும். இது போன்று மீதமுள்ள மாவையும் ஒன்றொன்றாக சுட்டு எடுக்கவும். சுவையான செட்டிநாட்டு சிறப்பு கந்தரப்பம் தயார்.

மேலும் படிக்க