தேவையான பொருட்கள்:
இறால் – அரை கப் (சுத்தம் செய்தது)
நலெண்ணெய் – ஒரு குழிகரண்டி
தேங்காய் எண்ணெய் – ஒரு குழிகரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
பூண்டு – பத்து பல்
சின்ன வெங்காயம் – அரை கப்
கரிவேபில்லை – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
புளி விழுது – இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
கடாயில் கடலெண்ணெய் அரை குழிகரண்டி ஊற்றி காய்ந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வந்ததும் சிம்மில் வைத்து அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், பூண்டு ஐந்து பல், சின்ன வெங்காயம், கரிவேபில்லை சேர்த்து வதக்கி ஆறியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
இன்னொரு கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை,இஞ்சி துருவல்,பொடியாக நறுக்கிய பூண்டு,சின்ன வெங்காயம் பத்து சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்,தக்காளி,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின், இறால் சேர்த்து ஐந்து நிமிடம் பொன்னிறமாக வதக்கவும்.பிறகு,அதில் அரைத்த விழுது மற்றும் புளி கரைச்சல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்