• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டிலேயே செய்திடலாம் பட்டர் நாண்…!

July 7, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 2 கப்.
ட்ரை ஈஸ்ட் – 1 டீஸ்பூன்.
வெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்.
சர்க்கரை – 1 டீஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்.
தண்ணீர் – 2/3 கப்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,வெதுவெதுப்பாக சூடேற்றி,அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்க வேண்டும்.பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு,உப்பு, தயிர்,பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து,ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி,நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.பிறகு அதனை 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு பார்த்தால்,மாவு நன்கு உப்பியிருக்கும்.அதனை மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து,சிறு உருண்டைகளாக உருட்டி,சப்பாத்திப் போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து,அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை மாவை வைக்க வேண்டும்.

நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது,அதன் மேல் வெண்ணெயை தடவி,மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.அவ்வளவுதான் சுவையான பட்டர் நாண் தயார்.அதன் மீது சிறிது வெண்ணெயை தடவி சூடாக பரிமாறலாம்.

மேலும் படிக்க