• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரசகுல்லா

October 13, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பால் – 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 மற்றும் 3/4 கப்
சர்க்கரை – 3/4 கப்
பாதாம், பிஸ்தா- தேவையான அளவு

செய்முறை :

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.பால் நன்கு கொதித்தது அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் திரியும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

பாலில் இருந்து தண்ணீர் பிரிந்ததும், அதனை மெல்லிய துணியில் போட்டு தண்ணீர் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும்.தண்ணீர் வடிந்ததும், திரிந்த பாலை தனியர் எடுத்து அதனை மென்மையாக பிசைய வேண்டும்.அடுத்தது பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.

பின்னர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.சர்க்கரை தண்ணிரில் கரைந்து சிறிது கெட்டியான பின்னர் உருட்டி வைத்துள்ளதை உருண்டைகளை அதில் போடவும்.

முதலில் குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.இறுதியாக சர்க்கரை நீரில் போட்ட திரிந்த பால் உருண்டைகள் வெந்ததும் அதனை குளிர வைத்து சிறிது அலவு பாதாம், பிஸ்தாவை அதன் மேல் தூவி பரிமாறலாம்.

குறிப்பு:

10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கும் போது 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க