• Download mobile app
26 Nov 2025, WednesdayEdition - 3577
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லிக்காய் பிரியாணி

April 26, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் – பத்து (கொட்டை நீக்கி, துருவியது)

பாசுமதி அரிசி – ஒரு கப் (இருபது நிமிடம் ஊறவைத்தது)

துருவிய தேங்காய் – கால் கப்

பச்சை மிளகாய் – இரண்டு

எண்ணெய் – மூன்று டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

வேர்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

ஊறவைத்த பாசுமதி அரிசியை உதிரிஉதிரியாக சாதம் வடித்து எடுத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேர்கடலை, துருவிய நெல்லிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கி கொள்ளவும்.பாசுமதி வடித்த சாததை வதக்கிய கலவையில் கொட்டி உதிரி உதிரியாக கிளறவும்.கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

மேலும் படிக்க