• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவை மிகுந்த தேங்காய் பர்பி செய்ய…!

February 5, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – தேவையான அளவு
ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவி துருவல் எவ்வளவு உள்ளதோ அதே அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு பாத்திரத்தை அடுப்பிலேற்றி மிதமான தீயில் கிளற வேண்டும். கிளறிக் கொண்டே அடிக்கடி கலவை எப்படி உள்ளது எனக் கவனிக்க வேண்டும். கலவையை எடுத்தால் சர்க்கரை கம்பி கம்பியாக தோன்றும் நிலை வரும். அப்போது அடுப்பை விட்டு இறக்கி அதில் ஏலக்காயை பொடித்துத் தூவ வேண்டும்.

பிறகு ரோஸ் வாட்டர் சிறிது சேர்க்க வேண்டும். ஒரு தட்டில் நெய் பூசி கலவையை கொட்டி பரப்பி சூடாக இருக்கும்போதே வேண்டிய உருவில் வெட்டிக் கொள்ள வேண்டும். சுவை மிகுந்த தேங்காய் பர்பி தயார்.

மேலும் படிக்க