• Download mobile app
24 Aug 2025, SundayEdition - 3483
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீப்பு சீடை

March 22, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்

உளுத்தம் மாவு – 1/4 கப்

கடலை மாவு – 1/4 கப்

கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சுடுநீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

தேங்காய் பால் போதாமல் இருந்தால்,சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு,தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி,பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும்.

பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி,பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தா,சீப்பு சீடை ரெடி!!!

மேலும் படிக்க