தேவையான பொருட்கள்:
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி – 1 டீஸ்பூன்
தக்காளி – 2 (நறுக்கியது)
வரமிளகாய் – 4
பூண்டு – 5 பற்கள்
சின்ன வெங்காயம் – 10
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு லேசாக வறுத்து இறக்கி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் கொள்ளுவை கழுவி, குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், மல்லி, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கி, பின் அதில் வேக வைத்துள்ள கொள்ளு சேர்த்து, கொத்தமல்லி தூவி 2 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, முக்கால் பதத்தில் அரைத்தால், கொள்ளு மசியல் ரெடி!!!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு