தேவையான பொருட்கள்:
மட்டன் – 1 கிலோ
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை ஏலக்காய் – 2
கருப்பு ஏலக்காய் – 2
பட்டை – 1
கிராம்பு – 4
மிளகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
தயிர் – 1/2 லிட்டர்
பூண்டு – 6 (தட்டியது)
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய், கிராம்பு, சோம்பு, மிளகு, பெருங்காயத் தூள் போன்றவற்றை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் மட்டனை சேர்த்து, அத்துடன் உப்பு, பூண்டு, மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில், மசாலா மட்டனுடன் ஒன்று சேர நன்கு வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் தயிரை நன்கு அடித்து ஊற்றி, உப்பு சுவை பார்த்து, மட்டனை நன்கு மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், காஷ்மீரி ரோகன் ஜோஷ் ரெடி!!!
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்