• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறால் முருங்கைக்காய் கிரேவி

October 17, 2018 samayalkurippu.com

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 1
இறால் – ¼ கிலோ
நறுக்கிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 2
பொடித்த மிளகு, சீரகம் – 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது – 2 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்த பின்,பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,பொடித்த மிளகு,சீரகம் சேர்த்து வதக்கவும்.பின்,அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதக்கியவுடன்,முருங்கைக்காய், இறால் சேர்த்து கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து,தேவையான அளவு தண்ணீர்,அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடி,15 நிமிடம் அடுப்பில் சிம்மில் வைத்து வேக விடவும்.எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கவும்.சுவையான இறால் முருங்கைகாய் கிரேவி தயார்!!

மேலும் படிக்க