தேவையான பொருட்கள்:
விருப்பமான காய்கள் – 3 வகைகள் (கேரட், பீன்ஸ், கோஸ்)
பொட்டுக்கடலை – 2 மேஜைக்கரண்டி
அரிசி மாவு – 2 கப்
மிளகாய் வற்றல் – 8
உப்பு – சிறிது
எண்ணெய் – போதுமானது
செய்முறை:
காயை சுத்தமாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு அது கொதித்ததும் நறுக்கிய காய் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் அடுப்பை விட்டு இறக்கவும்.
பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், அரிசி மாவு, உப்பு எல்லாம் உரலில் அல்லது மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும். இந்த பவுடரை வெந்த காயுடன் சேர்த்து கலந்து போதிய தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதிக்கத் தொடங்கியதும் கலவையை வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்ததும் எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் இதனுட வெங்காயம் சேர்த்து கொள்ளலாம்.
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்