August 17, 2017 தண்டோரா குழு
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை தொடங்க உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில், எதிர் மனுதாரராக அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா இணைந்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா இந்த வழக்கில் தன்னை எதிர்மனுதாரராக இணைந்து கொண்டார். இவர் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தமிழக பாட திட்டத்தில் படித்த இவர் நீட் நுழைவு தேர்வில் 86 மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.